அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 23

0 0
Read Time:1 Minute, 0 Second

தாழ்ப்பாள் இல்லாத கதவு, தானாக மூடி திறக்கும் கதவு அது என்ன?

விடை – க‌ண் இமை

காலடியில் சுருண்டிருப்பாள்; கணீர் என்று குரலிசைப்பாள்

விடை – மெட்டி

வித்தில்லாமல் விளையும்; வெட்டாமல் சாயும்

விடை – வாழை

அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை – அது என்ன ?

விடை – தலை வகிடு

வண்ணப் பட்டுச் சேலைக்காரி, நீல வண்ண ரவிக்கைக் காரி அது என்ன?

விடை – மயில்

அறிவின் மறுபெயர், இரவில் வருவது

விடை – மதி

வேகாத வெயிலில் வெள்ளையப்பன் விளைகிறான்

விடை – உப்பு

வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?

விடை – கத்தரிக்கோல்

தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்

விடை – இள‌நீ‌ர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 22
Next post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 24

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *