மாயா – பூர்ணிமா வாக்குவாதம் போட்டியாளர்கள் தீர்ப்பு

0 0
Read Time:2 Minute, 11 Second

பிக்பாஸ் வீட்டிற்குள் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் போட்டியாளர்கள் செய்யும் வேலைகள் குறித்து கமல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, நேற்றைய தினம் கொடுக்கப்பட்ட “ டான்ஸ் மரதன்” டாஸ்க்கில் மாயா சரியாக ஆடவில்லை என அவரின் உயிர் நண்பி பூர்ணிமாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதனால் மற்ற போட்டியாளர்கள் மத்தியில் அசிங்கப்பட்ட மாயா, “ ஏ நீங்க இப்படி பண்ணுறீங்க?..” என கவலையாக கேட்க, “நீங்க அப்படி நினைச்சா நா என்ன பண்ணுறது?” என பூர்ணிமா ஒரே வரியில் உரையாடலை முடித்து சென்றுள்ளார்.

அத்துடன் இன்றைய நாளுக்கான ப்ரோமோ முடிவடைந்துள்ளது. இனி வரும் ப்ரோமோக்களில் மாயா- பூர்ணிமா எப்படி நடந்து கொள்ள போகிறார்கள் என்பதனை பார்க்கலாம்.

சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ்,யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ், இந்த சீசனில் வீட்டிற்குள்ளே பல மாற்றங்களை செய்துள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த வாரம் பிக்பாஸ் பிரபலத்தின் மகளான ஜோவிகா விஜயகுமார் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார்.

நண்பர்களாக சுற்றிய மாயா – பூர்ணிமா இருவரும் தற்போது அடுத்தடுத்து மோதிக் கொள்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post லால் சலாம் மிரட்டலும்
Next post புலம்பும் மாயா- ஷாக்கில், பிக்பாஸ் போட்டியாளர்கள்

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *