அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 15

0 0
Read Time:1 Minute, 45 Second

நீண்ட உடலிருக்கும் தூணும் அல்ல ,உடலில் சட்டை இருக்கும் ஆனால் உயிர் இல்லை,துயிலில் சுகம் இருக்கும் மெத்தை அல்ல அது என்ன?

விடை – தலையணை

எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன?

விடை – நண்டு

ஓய்வு எடுக்காமல் இயங்கும் ஓய்வு எடுத்துவிட்டால் மறுபடியும் இயங்காது அது என்ன?

விடை – இதயம்

நான் இருந்ததில்லை ஆனாலும் இருப்பவனாக இருப்பேன் என்னை யாரும் பார்த்ததில்லை பார்க்கும் முன் பழசாயிருப்பேன் என்னை நம்பியே இந்த உலகமும் ,மக்களும் நல்லது நடக்குமென எண்ணுகிறார்கள் நான் யார்?

விடை – நாளை

கிட்ட இருக்கும் பட்டணம்; எட்டித்தான் பார்க்க முடியவிலை

விடை – முதுகு.

கோவிலைச் சுற்றிக் கருப்பு; கோவிலுக்குள்ளே வெளுப்பு

விடை – சோற்றுப்பானை-சோறு.

வெள்ளை ஆளுக்கு கறுப்புத் தலைப்பாகை

விடை – தீக்குச்சி

அரைசாண் ராணிக்கு வயிற்றில் ஆயிரம் முத்துகள்

விடை – வெண்டைக்காய்

அழுவேன்,சிரிப்பேன் அனைத்தும் செய்வேன் நான் யார்?

விடை – முகம் பார்க்கும் கண்ணாடி

முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும் அது என்ன?

விடை – நத்தை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 16
Next post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 17

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *