
Read Time:1 Minute, 23 Second
வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது அது என்ன?
விடை – கல்வி
அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சு
விடை – இடியாப்பம்
தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் -அது என்ன?
விடை – கப்பல்கள்
தொட்டால் மணக்கும், சுவைத்தால் புளிக்கும்
விடை – எழுமிச்சம்பழம்
இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும்
விடை – கடிகாரம்
உணவு கொடுத்தால் வளரும்; நீர் கொடுத்தால் அழியும்
விடை – நெருப்பு
ஊசி போல் இருப்பான், ஊரையே எரிப்பான்
விடை – தீக்குச்சி
கத்தி போல் இலை இருக்கும் கவரிமான் பூ பூக்கும் தின்ன பழம் கொடுக்கும் தின்னாத காய் கொடுக்கும் அது என்ன?
விடை – வேம்பு
எண்ணெய் வேண்டா விளக்கு; எடுப்பான் கை விளக்கு
விடை – மெழுகுவர்த்தி
அத்துவான காட்டிலே பச்சைப்பாம்பு தொங்குது – அது என்ன?
விடை – புடலங்காய்
